மக்களே அவதானம்…! கந்தளாய் குள வான் கதவுகள் திறக்கப்படலாம்? வெளியான அறிவிப்பு…!samugammedia

நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது கனமழை பெய்துவருவதன் காரணமாக பல நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன் வான்கதவுகளும் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது பெய்துவரும் அடை மழை காரணமாக கந்தளாய் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் இன்று(16) காலை 7 மணியளவில் 109,450 ஏக்கர் அடியாகப் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வரும் சந்தர்ப்பத்தில் வான் கதவுகள் திறக்கப்படலாம் என கந்தளாய் பிரதேச நீர்ப்பாசான பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தம்பலகாமம் பிரதேச செயலக பகுதி கந்தளாய் பிரதேச செயலக பகுதி மக்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே அவதானத்துடனும் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும்   பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *