400 ரூபாவுக்குச் சென்ற டொலரின் பெறுமதி..! இலங்கைக்கு விடப்பட்ட கடினமான தேர்வுகள்..! அமைச்சர் வெளியிட்ட தகவல்

 

கடந்த காலங்களில் 200 ரூபாயில் இருந்த டொலர் 400 ரூபாவுக்குச் சென்றது. பணவீக்கம் அதிகரித்து பொருளாதாரம் சரிந்தது. எங்களுக்கு கடினமான தேர்வுகள் விடப்பட்டன என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை  குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகள் கொடுத்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்கு வேறு வழியில்லை. வருமானம் செலவுக்கு பொருந்தவில்லை என்றால், பணத்தை வார்ப்பதே நமக்கு இருக்கும் ஒரே வழி.

அதனால் 200 ரூபாயில் இருந்த டொலர் 400 ரூபாவுக்குச் சென்றது. பணவீக்கம் அதிகரித்து பொருளாதாரம் சரிந்தது. எங்களுக்கு கடினமான தேர்வுகள் விடப்பட்டன. எதிர்க்கட்சிகள் எல்லாவற்றையும் விமர்சித்தாலும், அவர்களின் தீர்வு என்ன?

கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் ஏற்பட்ட முன்னேற்றமானது இலங்கை தொடர்பாக சர்வதேச மட்டத்தில் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு இது வழியேற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *