சரிகமப நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கில்மிசாவின் நெகிழ்ச்சி பதிவு!

தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான சீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.

சரிகமப நிகழ்ச்சிக்கு ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர்.

மேலும் சரிகமப நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்றைய  தினம் (17-12-2023) ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்துள்ளது.

அதன்படி, சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னராக யாழ்ப்பாண சிறுமி கில்மிஷா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இரண்டாவது வெற்றியாளராக ருத்ரேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வெற்றி பெற்ற பின்னர் ஈழத்து குயில் கில்மிஷா முகநூலில் வெளியிட்ட பதிவு,

எம் மண்ணுக்கும் மண்ணுக்காக உயிர் துறந்த எம் மறவர்களுக்கும் எனது வெற்றி சமர்ப்பணம்.

எனக்கு இத்தனை அன்பும் ஆதரவும் தந்த உங்கள் அனைவருக்கும் உங்கள் பிள்ளையாய் என்றும் நான்.. என கில்மிசா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post சரிகமப நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கில்மிசாவின் நெகிழ்ச்சி பதிவு! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *