புண்ணாக்குடன் பெரமுன அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்…!samugammedia

நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு முன்னால் புண்ணாக்கு வாளியுடன் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

மக்கள் போராட்டத்தின் தலைவர் சானக பண்டார உள்ளிட்ட குழுவினரே இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பெரமுனவின் பொதுச் செயலாளரான சாகர காரியவசத்திற்கு எதிராகவே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தையடுத்து பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தை சூழவுள்ள பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *