கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் வட்டுக்கோட்டை பொலிஸாரால் மீட்பு!samugammedia

கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக ஏ 9 வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் கடந்த மாதம் 27.11.2023 அன்று களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்களை தனித்தனியாக பிரித்து மோட்டார் சைக்கிளில் சொக்கச்சோர் ஒன்றை விற்பனை செய்ய முற்பட்ட வேளையில் உதிரி பாகங்களை விற்பனையில் ஈடுபட்டவர் மீது வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு சந்தேகம்  ஏற்பட்டதால் நிமித்தமாக அவர் 14.12.2023 அன்று கைது செய்து  விசாரணைகளை மேற்கொள்ளப்பட்ட போது கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டு அவற்றை தனித்தனியாக உதிரி பாகங்களை பிரித்து விற்பனை செய்வதற்காக யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளது என சந்தேகத்திற்கு செய்யப்பட்டவர்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைக்காக வட்டுக்கோட்டை பொலிஸார் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களுடன் சந்தேக நபரை கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார்  மேற்கொண்டு வருகிறார்கள்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *