நல்லூரானை தரிசித்த பிரபல தென்னிந்திய நடிகை ரம்பா..!

 பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகையான ரம்பா இன்று காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு குடும்பத்தினருடன் வருகை தந்துள்ளார்.

யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்குவதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.

எனினும் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த நிகழ்வானது எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை ரம்பாவும் குடும்பத்தினரும் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான இடங்களுக்கு சென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *