சீரற்ற காலநிலையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு – இன்றும் பாடசாலைகளுக்கு பூட்டு..!Samugammedia

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 200 குடும்பங்ளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் மாத்திரம் ஆயிரத்து 708 குடும்பங்களைச் சேர்ந்த 5,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்டுள்ளவர்களை தங்கவைக்கும் நோக்கில் இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்துவதற்காக வட மாகாணத்தின் 29 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *