அச்சுவேலி பகுதியில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு..!!புகையூட்டும் செயற்பாடு முன்னெடுப்பு..!!! Samugammedia

அச்சுவேலி பகுதியில் டெங்கின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று மாலை புகையூட்டும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

கோப்பாய் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனைக்குட்பட்ட அச்சுவேலி பகுதியில் அண்மைக்காலமாக டெங்கின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பொது சுகாதார பரிசோதர்களால் வீட்டுத்தரிசிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதன் செயற்பாடாக இன்றையதினம் அச்சுவேலி பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் புகையூட்டப்பட்டன.

கடந்த தினங்களில் கோப்பாய் பொது வைத்திய அதிகாரிகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கின் தாக்கத்தினால் உயிரிழப்புகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *