உணவகத்தினுள் நுழைந்து இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கும்பல்..! யாழில் பதற்றம்

 

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் இளைஞன் மீது, நேற்றைய தினம் வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது.

இச் சம்பவத்தில் துன்னாலை வடக்கை சேர்ந்த  21 வயது  இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உணவகத்தில் இளைஞன் வேலை செய்து கொண்டிருந்த வேளை,

உணவகத்தினுள் அத்துமீறி வாள்களுடன் புகுந்தவர்கள் இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *