போதைப் பொருள் ஒழிப்பு சோதனை – பருத்தித்துறை பொலீஸாரின் அதிரடி நடவடிக்கை….!samugammedia

பருத்தித்துறை போலீசார் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் இன்று பிற்பகல் 7:30மணியிலிருந்து முன்னெடுத்து வருகின்றனர். 

இந்த சோதனை நடவடிக்கை பருத்த்தித்திறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி  தலமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையில் பருத்தித்துறை உதவி போலீஸ் அத்தியட்சகர் D.cd. இலங்ககோன் வழிகாட்டலில் இடம் பெற்றுவருகிறது.

மோப்ப நாயின் உதவியுடன் கொழும்பு நோக்கி செல்ல தயாராக இருந்த பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இதில் மேலதிகமாக இராணுவம், சிறப்பு அதிரடி படையினர் ஆகியோரும் இணைந்துள்ளனர். இச்  சோதனை நடவடிக்கையில் எந்தவிதமான போதை பொருட்களும் இதுவரை கைப்பற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *