
தவறான மத போதனைகளை நடத்தி, சமூக ஊடகங்களில் பெளத்த மதத்தின் கொள்கைகளைத் திரிபுபடுத்தி மக்களை தற்கொலைக்குத் தூண்டியதுடன் தானும் தற்கொலை செய்து கொண்ட ருவான் பிரசன்ன குணரத்ன என்பவரின் போதனைகளில் கலந்து கொண்டிருந்தவர்களைத் தேடி சி.ஐ.டி. பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




