தம்பலகாமத்தில் பால் மா பக்கட்டுக்கள் வழங்கி வைப்பு..!samugammedia

ஜனாதிபதி செயலகம் ஊடாக நடை முறைப்படுத்தப்படும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பால் மா பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க  பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்ற குறித்த பால் மா பக்கட்டுக்களை பொன்டெறா நிறுவனத்தின் அணுசரனையில் வழங்கி வைக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட 90 குடும்பங்களுக்கு ஒருவருக்கு தலா 02 பக்கட்டுக்கள் வீதம் மொத்தமாக 180 பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டன. மந்தபோசணையுடைய பிள்ளைகளின் போசாக்கினை அதிகரிக்கும் நோக்கில் இது வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், தம்பலகாமம் இரானுவ முகாம் மேஜர் வன்னிநாயக்க, நிருவாக உத்தியோகத்தர் உடகெதர உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *