
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் பி.எம்.ஹம்ஸா, சவூதி அரேபிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சரும், அந்நாட்டின் காலநிலை விவகார தூதுவருமான ஆதில் பின் அஹமட் அல் ஜுபைரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது சவூதி அரேபியா இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளுக்கு விசேட நன்றிகளையும் தெரிவித்தார்.