எரிபொருள் குறித்து வௌியான முக்கிய செய்தி!

கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் செயல்பாடுகளை (bunkering system) மீள ஆரம்பித்ததன் மூலம் 5,200 மெற்றிக் டொன் எரிபொருளை விற்பனை செய்து 03 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்ட முடிந்ததாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி. வீ. சானக தெரிவித்தார்.

வலுசக்தி தேவைகளுக்காக 200 மில்லியன் டொலர்கள் மேலதிக கையிருப்பு பேணப்படுவதாகும் அவர் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக,

கடினமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு நாடு படிப்படியாக மீண்டு வரும் சூழ்நிலையில் நாம் தற்போது இருக்கிறோம். ஒரு காலத்தில் நாம் அனைவரும் எரிபொருள் வரிசையில் நின்றோம். அனைவரின் அர்ப்பணிப்புடன், நிலையான எரிபொருள் விநியோகத்தை பேண முடிந்துள்ளது. அண்மைக்கால வரலாற்றில் தற்போது மிகப்பெரிய அளவிலான எரிபொருள் கையிருப்பு வைத்திருக்கிறோம். பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் டொலர்களின் சேமிப்பையும் எம்மால் பேண முடிந்துள்ளது. என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *