சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் கல்வி அமைச்சினால் அறிவிப்பு..!

2024ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகளை நடாத்துவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார்.

இதன்படி, 2024ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மே மற்றும் ஜுன் மாதங்களில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 02ம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *