இலங்கையில் நெற் செய்கை பயிர்களுக்கு உதவிகளை வழங்க தயார் மஹிந்த அமரவீர..தெரிவிப்பு..!!

இலங்கையில் நெற் செய்கை மற்றும் ஏனைய மேலதிக பயிர்களுக்கு மேலதிகமாக தேயிலை, தென்னை, இறப்பர் போன்ற பெருந்தோட்ட பயிர்களின் அபிவிருத்தி தொடர்பில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் இயக்குநர் ஜெனரல் கு.டொங்குயி (Dr. Qu Donguyi) உள்ளிட்ட குழுவினர் எல்பிட்டிய அத்துகோரல தேயிலை தொழிற்சாலை மற்றும் அகலவத்தை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தை அவதானித்துள்ளனர்.

எதிர்காலத்தில் இலங்கையில் நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கும் தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை போன்ற தோட்டப் பயிர்களுக்கும் உதவிகளை வழங்குவது தொடர்பில் பணிப்பாளர் நாயகத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *