நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் திருமலையில் செயலமர்வு…!

பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமைக்கான பொறுப்புக்கள் எனும் தலைப்பில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று இன்று (09) திருகோணமலையில் உள்ள சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது.

குறித்த செயலமர்வை சுதந்திர ஊடக இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பிலும்  தெளிவூட்டப்பட்டது.

இந் நிகழ்வில்,  சுதந்திர ஊடக இயக்கத்தின் முக்கியஸ்தர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள் என  பலரும் கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *