![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2024/03/10-1.jpg)
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பாக்கியத்து சாலிஹாத் வீதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முகம்மது கலீல் முஹம்மது றிகாஸ் (வயது 29) மற்றும் முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது 18) ஆகிய விசேட தேவையுடைய இரு பிள்ளைகளும் கடந்த (14) வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் தாம் வசித்துவந்த வீட்டில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்த பிரதேசம் எங்கும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.