![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2024/05/6-1.jpg)
சவூதி அரேபியா மற்றும் இலங்கைக் குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகள் அடிப்படையிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பத்தைத் துடைக்க, இரு புனிதத்தளங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சாலமன் ஆல் ஸுஊத் அவர்களின் தலைமையிலான சவூதி அரேபிய அரசு மேற்கொள்ளும் முயச்சிகளின் அடிப்படையிலும், மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம், 2024 ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையின் கிழக்கு மாகாணம், “காத்தான்குடி” ப்பகுதியில் கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் சவூதி நூர் தன்னார்வத் திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது என இலங்கைக் குடியரசுக்கான சவூதி அரேபியத் தூதுவர் குறிப்பிட்டார்.