
அளுத்கம வர்த்தக நகரை மையப்படுத்தி அளுத்கம, பேருவளை உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பதிவான இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு ஞானசார தேரருக்கு எதிராக பரிந்துரைகளை முன் வைத்துள்ள நிலையில், அவ்வாணைக் குழு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.