இலங்கையில் ஒரேநாளில் 1,452 பேருக்கு கொரோனா

இலங்கையில் நேற்று (சனிக்கிழமை)  மாத்திரம் 1, 452 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய 1,447 பேர் உள்ளடங்குவதாகவும் ஏனைய 5 பேர், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 283,512 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 255,833 பேர் இதுவரை மீண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *