வாகரையில் பாரியளவிலான வெடிபொருட்கள் மீட்பு!

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பந்தனாவெளி சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 38 ஆர் பிஜி குண்டுகள்,38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளை இன்று (07) வாகரை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த வயலில் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்தவர் வயலை சுற்றி எல்லை வேலி அமைப்பதற்காக குழி தோண்டும் போது மர்மப் பொருட்கள் தென்படுவதை அவதானித்து வாகரை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற அனுமதியை பெற்ற விசேட அதிரடிப்படையினர் இன்று கொட்டும் மழையில் திருகோணமலை மாவட்ட விசேட அதிரடிப் படை உதவி அத்தியட்சகர் ஏ.எம் . ஜி. சுஜிவ அத்தனாயக்க தலைமையில் வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனுஷ்க பண்டார அம்பந்தனாவெளி கிராம சேவகர் சீ.கஜேந்திரன், வாகரை பிரதேச விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி அமில சிந்தக்க பிரேமரத்ன ஆகிய அதிகாரிகள் முன்னிலையில் தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பொலித்தீன் பைகளில் பொதி செய்து நுட்பமான முறையில் ஆழமான குழியில் புதைக்கப்பட்டிருந்த 38 ஆர்பிஜி குண்டுகள்,38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளது .
குறித்த பகுதி கடந்த யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் மருத்துவ முகாம் அமைந்திருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *