அதிருப்தியில் உறுப்பினர்கள் – சமாளிக்க அரசு பதவி அளிப்பு?

அரசாங்கத்தில் தற்போது பதவிகள் இல்லாததினால் அதிருப்தியாகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் துரித தீர்வொன்றை வழங்க அரசாங்கத்தின் உயர்பீடம் பேச்சு நடத்தியிருக்கின்றது.

இவ்வாறு அதிருப்தி நிலையை அடைந்துள்ள சில உறுப்பினர்களுக்கு அமைச்சுக்களை மேற்பார்வை செய்வதற்கான பதவிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசேடமாக அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை கண்காணிப்பு செய்வதற்கு மாத்திரமே இவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *