
செவனகல மற்றும் கதிர்காமம் பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்தனர்.
செவனகல – சமாதிபுர பிரதேசத்தில் நேற்றிரவு நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், சூரியவெவ – அலியொலுஆர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்ததாகவும் விசாரணைகைளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கதிர்காமம், ரஜமாவத்தை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய சந்தேக நபர்களை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.