மட்டு. ஏறாவூரில் கடலில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

<!–

மட்டு. ஏறாவூரில் கடலில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு! – Athavan News

மட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

ஆறுமுகத்தான்குடியிருப்பு காளிகோவில் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய கணேஸ் விமலராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த நபர் சம்பவதினமான நேற்று மாலை ஏறாவூர் கடற்கரையில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனா.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *