வவுனியாவில் சமையல் எரிவாயு வழங்குவதில் குழப்ப நிலை – வீதியினை மறித்து மக்கள் போராட்டம்

வவுனியா, பூனாவ பகுதியில் அமைந்துள்ள எரிவாயு விநியோகத்தர் வளாகத்தில் சமையல் எரிவாயு வழங்குவதில் குழப்ப நிலையடுத்து மக்கள் ஏ9 வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த எரிவாயு விநியோகத்தர் வளாகத்திலிருந்து எரிவாயு சிலிண்டர்கள் மாவட்ட முழுவதும் விநியோகிப்படுவதுடன் தற்போது எரிவாயு தட்டுப்பாட்டையடுத்து குறித்த எரிவாயு விநியோகத்தர் வளாகத்திலும் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் குறித்த விநியோக இடத்தில் இன்று காலை வரிசையில் மக்கள் காத்திருந்த போதிலும் 9.30 மணியளவில் எரிவாயு நிறைவடைந்துள்ளமையினால், இன்று விநியோகிக்கப்படமாட்டது என நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஏ9 வீதியில் எரிவாயு சிலிண்டர்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டமையினால் ஏ9 வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிப்படைந்ததுடன் குறித்த இடத்திற்கு ஈரப்பெரியகுளம் பொலிஸார் வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடி மக்களை வெளியேற்றினர்.

இதனையடுத்து 20 நிமிடங்களின் பின்னர் ஏ9 வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியதுடன் அவ்விடத்தில் பொலிஸாரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *