மயக்க மருந்து கொடுத்து சிறுமி துஷ்பிரயோகம்! ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து நன்பரையும் துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறுமியை  சிறுமியின் அக்காவின் கணவர் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது நன்பனையும் துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் அறிந்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் அத்தான் கைதுசெய்யப்பட்டுள்ளார். மற்றைய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.

சந்தேகநபர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *