நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, 25 ஆண்களும் மற்றும் 17 பெண்களும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,959 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 290,705 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 264,755 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.