நாட்டில் தினமும் 5 ஆயிரம் மெற்றிக் தொன் உணவு வீண்விரயம் செய்யப்படுவதாக தகவல்!

நாட்டில் தினமும் 5 ஆயிரம் மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகிறது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த தொகை ஆண்டுக்கு 1.3 பில்லியன் தொன். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பயிர்களில் நூற்றுக்கு சுமார் 40 சதவீதம் வீணடிக்கப்படுகின்றது.

சுமார் 5,000 மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட, சமைக்கப் படாத உணவு ஒவ்வொரு நாளும் குப்பையாக வீசப்படுகிறது.

இந்த நிலை நாட்டுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பாகும்.“ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *