மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதிக்கான நிர்மாணப்பணிகள் நிறைவடையும் தருவாயில்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமவிலிருந்து பொதுஹெர வரையான பகுதியில் நிர்மாணப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியின் நுழைவாயில் கம்பஹா மாவட்டத்தின் மீரிகமவில் இருந்து வெளியேறும் இடம் குருணாகலில் அமைந்துள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது நிர்மாணப்பணிகள் இடம் பெற்றுவருகின்றது.

கண்டி, குருணாகல் மற்றும் தம்புள்ளைக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த அதிவேக நெடுஞ்சாலை மிகவும் வசதியாக  அமையும் என்பது குறிப்பிடத்தகது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *