இலங்கையில் மேலும் 631 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவு

இலங்கையில் மேலும் 631 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனா  வைரைஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 57 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 16 ஆயிரத்து 465 ஆக உள்ளது.

மேலும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 847 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *