
கொழும்பு,மே 24
ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
இதற்காக ஜீ 7 நாடுகள், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

