எரிந்த நிலையில் சடலம் மீட்பு!

தமன, விகலாமடு பிரதேசத்தில் வயல் நிலம் ஒன்றில் எரிந்த நிலையில்; சடலம் ஒன்று மீட்;கப்பட்டுள்ளது.

புதிய நகரம், எராகம பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

நேற்றுக் காலை தமன பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *