யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை 3 ஆம் கட்டை மானிப்பாய் பிரதான வீதியில் உள்ள பாலம் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
மழை காரணமாக தற்போது, பொது மக்கள் வாகன போக்குவரத்து செய்வதில் ஆபத்தான நிலை காணப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு இவ்வீதி தற்போது இளைஞர்கள் இணைந்து தற்காலிகமாக வாகன போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர்.
![](https://storage.googleapis.com/samugammedia-storage/2021/10/172cc111-b066-40c0-bf1d-df9457deadf5-1-1.jpg)
இதனை கருத்தில் கொண்டு பொது மக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.